மாடுகட்டி போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடித்த
பண்டைக்கால
பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.
ஆனால்...
இன்றைய காலகட்டத்தில்,
பருவமழை பொய்க்கும்போது
பிற மாநிலங்களிடம்
தண்ணீருக்காக கையேந்தும் அவலநிலை
அவ்வப்போது நமக்கு ஏற்படுகிறது.
இதற்கு இயற்கை மட்டும் காரணமல்ல,
நம்மிடையே விழிப்புணர்வு இல்லாததும்
மிக முக்கிய காரணம்.
மேகத்தை குளிர்வித்து
மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி
மரங்களுக்கு மட்டுமே உண்டு.
இதனை கற்றுக்கொண்ட நாடுகள்
மரங்கள் வளர்ப்பு இயக்கத்தை
தேசிய இயக்கமாக மாற்றி
அளப்பரிய பயன் பெற்றது வரலாறு.
இந்தோனேசிய நாட்டின்
ஜீவ நதிகள் வறண்டபோது
அங்குள்ள நதிக்கரைகளில்
சூபாபுல் மரங்களை
நட்டு வளர்க்கும்
மாபெரும் இயக்கத்தை
அந்நாட்டு விவசாயிகள் நடத்தினர்.
மூன்றே ஆண்டுகளில்
வறண்ட ஆறுகள்
ஜீவ நதிகளாக மாறின.
இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட
அவர்கள் செய்த முதல் வேலை,
மரங்கள் நடும் மாபெரும்
தேசிய இயக்கத்தை நடத்தியதுதான்.
20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட
இஸ்ரேல் நாட்டில்,
25 கோடி மரங்கள்
புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால்,
அந்தப் பாலைவன பூமியில்
பசும் சோலைகள் உருவாகி விட்டன.
நம்மைவிட பல மடங்கு திறனுடன்
ஆப்பிளும், தக்காளியும்
அங்கே விளைகின்றன.
இஸ்ரேல் நாட்டைப்போல்
6 மடங்கு
அதிக பரப்பு கொண்டது நம் மாநிலம்.
1,30,000 சதுர கிலோமீட்டர்
பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு
மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
இளைஞர்கள் களம் இறங்கினால்,
நமது 17,000 கிராமங்களில்
ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம்
மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து
100 கோடி மரங்கள் வளர்ப்பது
100 சதம் சாத்தியமே.
வேலிக்கருவை என்ற
நச்சுமரத்தை அப்புறப்படுத்தி,
வேம்பு, மலைவேம்பு,
புளி, பூவரசு, சூபாபுல்
புங்கன், தேக்கு, செம்மரம்
உள்ளிட்ட வளம்தரும் மரங்களை
அதிகம் வளர்க்க வேண்டும்.
சூபாபுல் எனப்படும் சவுண்டல் மரங்களை
நெருக்கமாக காடுபோல் வளர்க்கும்போது
நடக்கும் அதிசயத்தை நேரில் கண்டவன் நான்.
நான் படித்த
மதுரை வேளாண்மை கல்லூரியில் இருந்து
சவுண்டல் மர விதைகளை எடுத்துவந்து
கிராமத்து தோட்டத்தில் போட்டுவைத்தேன்.
அவை அதிவேகமாக வளர்ந்து அடர்ந்து
காடுபோல் மாறிவிட்டன.
எங்கள் கிராமத்துக்கு மேல் மேகமூட்டம் வரும்போது,
சவுண்டல் தோப்பில் முதலில் மழை இறங்கியது.
தோட்டவேலை செய்த அண்ணன்மார்கள்
இதனை மகிழ்ச்சியோடு உறுதிசெய்தனர்.
மேகங்களை குளிர்வித்து
மழையாக ஈர்க்கும் மந்திர ஆற்றல்
மரங்களுக்கு உண்டு.
பெய்யும் மழைநீரை புனல்போல செயல்பட்டு
மண்ணுக்கு அடியில் சேகரிக்கும்
அதிசய ஆற்றலும் மரங்களுக்கு உண்டு.
தமிழகத்துக்கு இப்பொது தேவை
பயன்தரும் 100 கோடி மரங்கள்.
இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால்,
ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக
மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைமை
ஒருபோதும் வராது.
மாதம் மும்மாரி பொழிவது
இயற்கை நியதியாக மாறிவிடும்.
தமிழ்நாட்டில் 100 கோடி மரங்கள்
வளர்க்கும் பிரமாண்ட இலக்கை நோக்கி,
அவரவர்க்கு சாத்தியமான
முன்முயற்சியைத் தொடங்குவோம்.
எதிர்கால தலைமுறைக்கும்
பயன்களை அள்ளித்தரும்
மரங்கள் வளர்க்கும் இயக்கத்தில்
நீங்களும் பங்கு பெறுங்கள்.
மரம் வளர்ப்போம்..! மழை பெறுவோம்..!
சுசி திருஞானம்
99400 90596
மாளாது செந்நெல் என்று
யானைகட்டிப் போரடித்த
பண்டைக்கால
பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.
ஆனால்...
இன்றைய காலகட்டத்தில்,
பருவமழை பொய்க்கும்போது
பிற மாநிலங்களிடம்
தண்ணீருக்காக கையேந்தும் அவலநிலை
அவ்வப்போது நமக்கு ஏற்படுகிறது.
இதற்கு இயற்கை மட்டும் காரணமல்ல,
நம்மிடையே விழிப்புணர்வு இல்லாததும்
மிக முக்கிய காரணம்.
மேகத்தை குளிர்வித்து
மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி
மரங்களுக்கு மட்டுமே உண்டு.
இதனை கற்றுக்கொண்ட நாடுகள்
மரங்கள் வளர்ப்பு இயக்கத்தை
தேசிய இயக்கமாக மாற்றி
அளப்பரிய பயன் பெற்றது வரலாறு.
இந்தோனேசிய நாட்டின்
ஜீவ நதிகள் வறண்டபோது
அங்குள்ள நதிக்கரைகளில்
சூபாபுல் மரங்களை
நட்டு வளர்க்கும்
மாபெரும் இயக்கத்தை
அந்நாட்டு விவசாயிகள் நடத்தினர்.
மூன்றே ஆண்டுகளில்
வறண்ட ஆறுகள்
ஜீவ நதிகளாக மாறின.
இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட
அவர்கள் செய்த முதல் வேலை,
மரங்கள் நடும் மாபெரும்
தேசிய இயக்கத்தை நடத்தியதுதான்.
20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட
இஸ்ரேல் நாட்டில்,
25 கோடி மரங்கள்
புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால்,
அந்தப் பாலைவன பூமியில்
பசும் சோலைகள் உருவாகி விட்டன.
நம்மைவிட பல மடங்கு திறனுடன்
ஆப்பிளும், தக்காளியும்
அங்கே விளைகின்றன.
இஸ்ரேல் நாட்டைப்போல்
6 மடங்கு
அதிக பரப்பு கொண்டது நம் மாநிலம்.
1,30,000 சதுர கிலோமீட்டர்
பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு
மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
இளைஞர்கள் களம் இறங்கினால்,
நமது 17,000 கிராமங்களில்
ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம்
மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து
100 கோடி மரங்கள் வளர்ப்பது
100 சதம் சாத்தியமே.
வேலிக்கருவை என்ற
நச்சுமரத்தை அப்புறப்படுத்தி,
வேம்பு, மலைவேம்பு,
புளி, பூவரசு, சூபாபுல்
புங்கன், தேக்கு, செம்மரம்
உள்ளிட்ட வளம்தரும் மரங்களை
அதிகம் வளர்க்க வேண்டும்.
சூபாபுல் எனப்படும் சவுண்டல் மரங்களை
நெருக்கமாக காடுபோல் வளர்க்கும்போது
நடக்கும் அதிசயத்தை நேரில் கண்டவன் நான்.
நான் படித்த
மதுரை வேளாண்மை கல்லூரியில் இருந்து
சவுண்டல் மர விதைகளை எடுத்துவந்து
கிராமத்து தோட்டத்தில் போட்டுவைத்தேன்.
அவை அதிவேகமாக வளர்ந்து அடர்ந்து
காடுபோல் மாறிவிட்டன.
எங்கள் கிராமத்துக்கு மேல் மேகமூட்டம் வரும்போது,
சவுண்டல் தோப்பில் முதலில் மழை இறங்கியது.
தோட்டவேலை செய்த அண்ணன்மார்கள்
இதனை மகிழ்ச்சியோடு உறுதிசெய்தனர்.
மேகங்களை குளிர்வித்து
மழையாக ஈர்க்கும் மந்திர ஆற்றல்
மரங்களுக்கு உண்டு.
பெய்யும் மழைநீரை புனல்போல செயல்பட்டு
மண்ணுக்கு அடியில் சேகரிக்கும்
அதிசய ஆற்றலும் மரங்களுக்கு உண்டு.
தமிழகத்துக்கு இப்பொது தேவை
பயன்தரும் 100 கோடி மரங்கள்.
இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால்,
ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக
மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைமை
ஒருபோதும் வராது.
மாதம் மும்மாரி பொழிவது
இயற்கை நியதியாக மாறிவிடும்.
தமிழ்நாட்டில் 100 கோடி மரங்கள்
வளர்க்கும் பிரமாண்ட இலக்கை நோக்கி,
அவரவர்க்கு சாத்தியமான
முன்முயற்சியைத் தொடங்குவோம்.
எதிர்கால தலைமுறைக்கும்
பயன்களை அள்ளித்தரும்
மரங்கள் வளர்க்கும் இயக்கத்தில்
நீங்களும் பங்கு பெறுங்கள்.
மரம் வளர்ப்போம்..! மழை பெறுவோம்..!
சுசி திருஞானம்
99400 90596

















